கோவை மனம் (226-250)

 கோவை மனம் 226.      மனதை ஈர்க்கக் கூடிய புறப்பொருள்கள் எல்லாம் அழியும் தன்மை உடையன.  ஆனால், அகப்பொருள்கள் எல்லாம் ஆக்கும் தன்மை கொண்டன.

கோவை மனம் 227. மன ஒருமைப்பாடு இல்லாத தியானம் வீண்.

கோவை மனம் 228.      மனம் சுத்தமாக இருந்தால் அறிவு பெருகும்.

கோவை மனம் 229.      மாசுற்ற மனம் கொண்டவன் பிறரிடம் குற்றங்களையே காண்பான்.  ஆனால், மாசற்ற மனம் கொண்டவன் பிறரிடம் குற்றங்கள் இருந்தாலும் அவற்றிலும் நல்லதையே தேடுவான்.

கோவை மனம் 230.      பிறரிடம் குற்றங்களைக் காண்பதை விட்டுவிட்டு, உன்னிடம் உள்ள குற்றங்களை எண்ணிப்பார் உன் மனம் அமைதி காணும்.

கோவை மனம் 231.      தேவையான இடங்களில் நாவடக்கம் தேவை.

கோவை மனம் 232.      விலையில்லாத குப்பைதான் வீதிக்கு வருகிறது. எல்லா குப்பைக்கும் விலை வைத்துப் பார். வீடும் நாடும் சுத்தமாகும்.

கோவை மனம் 233.      நல்லதை செய்வதற்கு நேரங்காலம் பார்க்காதே.

கோவை மனம் 234.      வேலையில் கவனம் செலுத்து. உன்னுடைய வீணான நினைவுகள் காணாமல் போகும். நிம்மதி பெருகும்.

கோவை மனம் 235.      எச்செயலுக்கும் அச்செயலுக்குரிய பலனை அடைவாய்.

கோவை மனம் 236.      ஒருவனின் உள்ளுணர்ச்சிகளுக்கு ஏற்பதே அவனுடைய அன்பின் அளவுகோல் அமையும்.

கோவை மனம் 237.      குரு பக்தியே சீடனின் முக்தி.

கோவை மனம் 238.      மரியாதையுடன் செய்யும் செயலே உன்னிடம் மற்றவர்கள் மரியாதை காட்டச் செய்யும்.

கோவை மனம் 239.      ஒத்த கருத்துடைய கணவன்-மனைவியால் குடும்பம் உயரும்.

கோவை மனம் 240.      வாழ்க்கையில் எவனொருவன் துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபடுகிறானோ அவனே பேறு பெற்றவனாவான்.

கோவை மனம் 241.      எண்ணம், ஆற்றல், நம்பிக்கை ஆகிய மூன்றும் ஓர் இலக்கு நோக்கியதாக இருக்கும்போது உன்னுடைய வெற்றிப் பாதை திறந்திருக்கும்.

கோவை மனம் 242.      உங்களின் இலக்குகளைத் தினந்தினம் எண்ணிச் செயற்படும்போது வெற்றிப் படியை விரைவில் எட்டுவீர்.

கோவை மனம் 243.      சுயநலம் கொண்டவன் நட்பைத் தேடிச் செல்வான். சுயநலமில்லாதவன் நட்பைத் தேடுவதில் எண்ணம் கொள்ள மாட்டான். ஆனால், தானாக அமையும் ஒத்த மனத்தினரோடு நட்பாவான்.

கோவை மனம் 244.      முட்டாள்களை அறவே துடைத்தெறி.

கோவை மனம் 245.      நான் என்பதை நாம் என்று மாற்றிப்பார் ஆசையற்ற வாழ்வு அமைந்து, வாழ்க்கை சிறக்கும்.

கோவை மனம் 246.      ஒருவனின் ஆசையே அவன் வாழ்க்கையில் முன்னேற்றத் தடைக்கல்.

கோவை மனம் 247.      மக்கள் விரும்புவதைப் படைப்பவனைவிட மக்கள் விரும்பப் படைப்பவனே எழுத்தாளன்.

கோவை மனம் 248.      மழை குறைவாக பெய்தாலும், வடிகால் இல்லை என்றால் அதுவும் பெருமழையே.

கோவை மனம் 249.      ஆற்றில் ஊற்று நீர் இல்லையென்றாலும் நிலத்தடி நீர் இருக்கும்.

கோவை மனம் 250.      ஆணவக்காரன், நல்ல நண்பர்களை இழப்பான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவை மனம் (701-725)

கோவை மனம் (726-750)

கோவை மனம் (751-775)